பதிவு செய்த நாள்
10 ஏப்2016
03:52
கோல்கட்டா:இந்தியாவில் முதல் முறையாக, ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான, ‘ஐபோன் எஸ்.இ.,’ வாடிக்கையாளர்களை அவ்வளவாக கவரவில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு, இந்தியாவில் எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. ஆனால், தற்போது, அந்நிறுவனம் அறிமுகம் செய்த, ஐபோன் எஸ்.இ., வேகமாக விற்பனை ஆகவில்லை.
ஆப்பிள் நிறுவனம், இந்தியாவிற்கு, 1.70 கோடி ஐபோன் எஸ்.இ., போனை விற்பனைக்கு அனுப்பியது. ஆனால், டில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில், ஆரம்ப நாளில், 2,000 போன்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. விலை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இதுகுறித்து, ஆப்பிள் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கத்திற்கு மாறாக, ஐபோன் எஸ்.இ.,க்கு தேவை குறைவாக உள்ளது. இதை சரிசெய்து, விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|