பதிவு செய்த நாள்
10 ஏப்2016
04:00
புதுடில்லி:பஜாஜ் ஆட்டோ – கே.டி.எம்., இணைந்து, இந்தோனேஷியாவில், இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன. இந்தியாவிலுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம்,
ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கே.டி.எம்., நிறுவனத்தில், 48 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. தற்போது, பஜாஜ் ஆட்டோ – கே.டி.எம்., நிறுவனங்கள் இணைந்து, இந்தோனேஷியா நாட்டில், 400 சி.சி., வரையிலான திறன் உடைய, ‘டியூக், ஆர்.சி.,’ பிராண்டில், இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, கே.டி.எம்., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:தெற்கு ஆசிய நாடுகளில், எங்களின் இருசக்கர வாகன விற்பனையை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளோம். இந்தியாவில், கே.டி.எம்., வாகனங்களை பஜாஜ் நிறுவனம், சிறப்பான முறையில் விற்பனை செய்தது. இதேபோல், இந்தோனேஷியாவிலும், எங்கள் வாகனத்தை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|