பதிவு செய்த நாள்
10 ஏப்2016
04:04
புதுடில்லி:‘‘டில்லியில் மாசு அளவைக் குறைக்க வேண்டுமென்றால், பழைய கார்களுக்குத் தடை விதிக்க வேண்டும்,’’ என, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பார்கவா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:சுப்ரீம் கோர்ட், 2,000 சி.சி., திறனுக்கு மேற்பட்ட டீசல் கார் விற்பனைக்கு, டில்லியில் விதித்த தடையை, இம்மாதம், 31ம் தேதி வரை நீட்டித்துஉள்ளது. இதில், மாருதி சுசூகி நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இவ்வகை கார்களைத் தயாரிக்கும், ‘டொயோட்டா’ நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது, தயாரிப்பு துறையில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி வரும், வாகன துறையின் வளர்ச்சியைத் தடுப்பதாக உள்ளது. இது போன்று தடை விதிப்பதற்கு பதிலாக, டில்லியில் ஓடும் மிகப் பழமையான கார்களுக்கு தடை விதிக்கலாம்.
புதிய கார்கள், சுற்றுச்சூழல் மாசு தொடர்பான, ‘பாரத் – 5’ விதிமுறைகளின் படி தயாரிக்கப்படுகின்றன. அவை வெளியிடும் மாசு, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் உள்ளதால், அத்தகைய கார்களின் விற்பனையை அனுமதிக்கலாம். டில்லியில், ஆறு லட்சம் டீசல் கார்கள் ஓடுகின்றன. அவற்றில், இரண்டு லட்சம் கார்கள், ‘பாரத் – 1’ விதிமுறைப்படி தயாரிக்கப்பட்டவை. அவை, தற்போது தயாரிக்கப்படும் கார்களை விட, ஆறு மடங்கு மாசுவை வெளிப்படுத்துகின்றன.
இந்த கார்கள், 12 லட்சம் புதிய கார்களுக்கு இணையாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகவே, இத்தகைய பழைய கார்களுக்கு தடை விதித்து, புதிய டீசல் கார்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இது, ஒட்டுமொத்த வாகன துறையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|