பதிவு செய்த நாள்
10 ஏப்2016
23:24
கோல்கட்டா : ‘இந்தியாவில், கடந்த 2015ல், பிளாட்டினம் விற்பனை, 24 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது’ என, பிளாட்டினம் கில்டு இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், ‘ஸ்டார்வொன் பிசுனஸ் கன்சல்டிங்’ என்ற நிறுவனம் மூலம், இந்தியாவில், மக்களிடம் பிளாட்டினம் நகைகளுக்கு உள்ள வரவேற்பு மற்றும் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், நாடு தழுவிய அளவில், 21 நிறுவனங்கள் மற்றும் 310 சில்லரை விற்பனை கடைகள் பங்கேற்றன. இதில், இந்தியாவின் முக்கிய நகரங்களில், பிளாட்டினம் நகைகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இதற்கு, 2009ல், பிளாட்டினம் அன்பு தினத்தை முன்னிட்டு, அறிமுகமான பிளாட்டினம் மோதிரம், வளையல் ஆகியவையே காரணம்.அதுமுதல், இந்தியாவில் பிளாட்டினம் மோதிரம், வளையல்கள், ‘பென்டன்ட்’ ஆகியவற்றுக்கு வரவேற்பு பெருகி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|