பதிவு செய்த நாள்
10 ஏப்2016
23:29
ஐதராபாத் : சீனாவைச் சேர்ந்த, கெஸோயுபா குரூப் நிறுவனம், தெலுங்கானாவில் முதலீடு செய்யவும், பாசன கட்டுமான திட்டங்களில் பங்கெடுக்கவும் முன்வந்திருக்கிறது. சீனாவைச் சேர்ந்த, கெஸோயுபா குரூப் நிறுவனம், கட்டுமானம் மற்றும் பொறியியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனமாகும். தெலுங்கானா மாநில கட்டுமான திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வது தொடர்பாக, இந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு, மாநில முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்தது. இதையடுத்து, முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில அரசு, கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளை ஒட்டி, பாசன திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நெடுஞ்சாலை, பாலங்கள் உள்ளிட்ட கட்டுமான திட்டங்கள் குறித்தும், சீன நிறுவனத்துடன் பேசியதாக தெரிகிறது. மீண்டும், இருதரப்பும் சந்திக்க உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|