பதிவு செய்த நாள்
11 ஏப்2016
01:12
மும்பை : மாதிரி இடர்பாட்டு நிர்வாகத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில், வங்கிகளின் இயக்குனர் குழுக்கள் முன்னிலை வகிப்பதாக, கே.பி.எம்.ஜி., நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விவரம்: ஆய்வில் பங்கேற்ற வங்கிகளில், பெரும்பான்மையான வங்கிகள், மாதிரி இடர்பாட்டு திட்டங்கள், மத்திய குழுவால் நிர்வகிக்கப்பட வேண்டும் என, தெரிவித்து உள்ளன. தனியார் துறையில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வங்கிகள், இத்தகைய திட்டங்களுக்கு, இயக்குனர் குழு ஆதரவளிப்பதாக கூறியுள்ளன. எஞ்சிய வங்கிகள், இயக்குனர் குழுவின் ஆதரவு அதிகரிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளன. இதே போல, ஆய்வில் கலந்து கொண்ட, பொதுத் துறையைச் சேர்ந்த பெரும்பாலான வங்கிகள், மாதிரி இடர்பாட்டு திட்டங்களுக்கு, இயக்குனர் குழு, கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. இயல்பாகவே, இயக்குனர் குழு ஆதரவளிப்பதாக, 17 சதவீத வங்கிகள் கூறியுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வுகே.பி.எம்.ஜி., நிறுவனம், மாதிரி இடர்பாட்டு நிர்வாகம் குறித்து,மேற்கொண்ட ஆய்வில், பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளில், 30 சதவீத வங்கிகள் கலந்து கொண்டன. தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகளில்,53 சதவீதம்; அயல்நாட்டு வங்கிகளில்,12 சதவீதம் என்ற அளவில்,இந்த ஆய்வில் பங்கேற்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|