‘கான்­டாக்ட்லெஸ்’ கார்டு ருபே கார்டும் மாறு­கி­றது‘கான்­டாக்ட்லெஸ்’ கார்டு ருபே கார்டும் மாறு­கி­றது ... தெளிவற்ற கொள்கையால்... வலைதள சந்தை நிறுவனங்களின் சலுகைகள் தொடரும் தெளிவற்ற கொள்கையால்... வலைதள சந்தை நிறுவனங்களின் சலுகைகள் தொடரும் ...
உர நிறுவனங்களின் லாபம் குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
01:13

புதுடில்லி : மத்திய அரசு, 'காம்ப்ளக்ஸ்' உரங்களுக்கான மானியத்தை, 25 - 30 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது.
இது, இவ்வகை உரங்களை தயாரிக்கும் கோரமண்டல் இன்டர்நேஷனல், தீபக் பெர்டிலைசர்ஸ் போன்ற நிறுவனங்களின் லாப வரம்பை பாதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு மானியத்தை குறைக்கும் பட்சத்தில், இந்நிறுவனங்கள், காம்ப்ளக்ஸ் உரத்திற்கான சந்தை விலையை உயர்த்தும். ஏற்கனவே, யூரியாவை விட ஊட்டச்சத்து மிக்க காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை உயர்வாக உள்ளது. அது மேலும் அதிகரிக்கப்பட்டால், விவசாயிகள், யூரியாவை நாடுவது அதிகரிக்கும்.
இதனால், காம்ப்ளக்ஸ் உரங்களின் விற்பனை குறையும். ஏற்கனவே, உர நிறுவனங்களிடம் காம்ப்ளக்ஸ் உரம் மற்றும் டி.ஏ.பி., கையிருப்பு, 45 லட்சம் டன் என்ற அளவில் தேவையை விட அதிகமாக உள்ளது. அதனால், உரம் தயாரிக்கும் நிறுவனங்கள், காம்ப்ளக்ஸ் உரங்களின் விற்பனையை உயர்த்த சலுகைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால், காம்ப்ளக்ஸ் உரம் தயாரிக்கும் நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், உர மானிய குறைப்பால், மத்திய அரசுக்கு, 4,500 - 5,000 கோடி ரூபாய் மிச்சமாகும். மத்திய அரசின் உர மானியம், நடப்பு 2016 - 17ம் நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


 யார் யார்?
என்.பி.கே., எனப்படும் காம்ப்ளக்ஸ் உரம் தயாரிப்பில், கோரமண்டல் இன்டர்நேஷனல், தீபக் பெர்டிலைசர்ஸ் அண்டு பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன், குஜராத் ஸ்டேட் பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ், டாடா கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)