உர நிறுவனங்களின் லாபம் குறையும்உர நிறுவனங்களின் லாபம் குறையும் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.66.50 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.66.50 ...
தெளிவற்ற கொள்கையால்... வலைதள சந்தை நிறுவனங்களின் சலுகைகள் தொடரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
01:17

புது­டில்லி : ‘மத்­திய அரசின் மின்­னணு கொள்கை தெளி­வில்­லாமல் உள்­ளதால், வலை­த­ளத்தில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்யும் நிறு­வ­னங்­களின் சலு­கைகள் தொடரும்’ என, இந்­தியா ரேட்டிங்ஸ் அண்டு ரீசர்ச் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
வலை­த­ளத்தில் விற்­கப்­படும் பொருட்­களின் விலை குறை­வாக உள்­ளதால், கடை­களில் அப்­பொ­ருட்­களை விற்­பனை செய்வோர் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இதைக் கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில், மத்­திய அரசு, புதிய மின்­னணு கொள்­கையை சமீ­பத்தில் அறி­வித்­தது. அதன்­படி, வலை­த­ளங்­களில் சந்­தையை அமைக்கும் நிறு­வ­னங்­களில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், பொருட்­களை விற்போர் மற்றும் வாங்­கு­வோ­ரி­டையே பால­மாக மட்­டுமே செயல்­பட முடியும்.
நேர­டி­யாக பொருட்­களை வாங்கி, இருப்பு வைத்து விற்­பனை செய்ய அனு­ம­தி­யில்லை என, அரசின் விதி­முறை தெரி­விக்­கி­றது. அதனால், பொருட்­களின் விலையை, வலை­தள சந்தை நிறு­வ­னங்கள் நிர்­ண­யிக்க முடி­யாது. இதன் கார­ண­மாக, தள்­ளு­படி சலு­கைகள் வழங்கி, விலை குறை­வாக பொருட்­களை விற்­பனை செய்­வது கட்­டுக்குள் வரும் என, தெரி­விக்­கப்­பட்­டது. ஒரு நிறு­வ­னத்தின் பொருட்கள் விற்­பனை, 25 சத­வீ­தத்தை தாண்டக் கூடாது எனவும், வலை­தள சந்தை நிறு­வ­னங்­க­ளுக்கு கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது.
இது, ‘கிள­வுட்டெய்ல் இந்­தியா, டபிள்யு எஸ் ரீடெய்ல் சர்­வீசஸ்’ போன்ற கூட்டு நிறு­வ­னங்­களின் பொருட்­களை, பெரும்­பான்­மை­யாக விற்­பனை செய்து வரும், அமேசான் செல்லர் சர்­வீசஸ், பிளிப்கார்ட் இந்­தியா போன்ற வலை­தள சந்தை நிறு­வ­னங்­களை பாதிக்கும். அதனால், இந்­நி­று­வ­னங்கள், இனி, ‘ஒரு பொருள்; பல வணி­கர்கள்’ என்ற திட்­டத்தை பின்­பற்றி, பொருட்­களை விற்­பனை செய்யும். இதன் மூலம், அரசின் விதி­மு­றையை மீறாமல் அதே­ச­மயம், பொருட்­களின் விலை மீதான கட்­டுப்­பாட்டை, அந்­நி­று­வ­னங்கள் தங்கள் கைக்கு கொண்டு வந்து விடும். அதன் மூலம், வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், வழக்கம் போல் சலு­கை­களை வழங்கும்.
இது, கடை மற்றும் வலை­தள பொருட்­களின் விலையில் உள்ள வித்­தி­யா­சத்தை குறைக்கும் அரசின் முயற்­சிக்கு பின்­ன­டை­வாக இருக்கும். ‘மின்­னணு கொள்­கையில் காணப்­படும் இது­போன்ற சில சிக்­கல்­க­ளுக்கு தீர்வு கண்டால் மட்­டுமே, நுகர்வோர் மற்றும் சில்­லரை வியா­பா­ரி­களின் நலனை காக்க வேண்டும் என்ற, மத்­திய அரசின் நோக்கம் முழு­மை­யாக நிறை­வேறும்’ என, இந்­தியா ரேட்டிங்ஸ் அண்டு ரீசர்ச் அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)