தெளிவற்ற கொள்கையால்... வலைதள சந்தை நிறுவனங்களின் சலுகைகள் தொடரும்தெளிவற்ற கொள்கையால்... வலைதள சந்தை நிறுவனங்களின் சலுகைகள் தொடரும் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.66.50 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.66.50 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சிறு முத­லீட்­டா­ளர்­களை ஏமாற்றும் வதந்­திகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
07:19

பங்­குச்­சந்தை வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டுள்ள சிறு முத­லீட்­டா­ளர்கள் பங்கு பரி­வர்த்­தனை தொடர்­பான சரி­யான தக­வல்­களை கண்­ட­றி­வதில் ஆர்வம் காட்­டு­வ­தோடு, பொய்­யான விவ­ரங்கள் குறித்தும் விழிப்­பு­ணர்வு கொண்­டி­ருப்­பது அவ­சியம். பங்­குகள் தொடர்­பான பொய்­யான தக­வல்­களை பரப்பி முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் செயற்­கை­யான ஆர்­வத்தை உண்­டாக்கி லாபம் பார்க்கும் முயற்­சியில் சிலர் ஈடு­பட்டு வரு­வதே இதற்கு காரணம்.
பங்­குச்­சந்தை தொடர்­பான தவ­றான விவ­ரங்­களை பரப்­பு­பவர்­களை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான ’செபி’ தீவி­ர­மாக செயல்­பட்டு வந்­தாலும், மோசடி ஆசா­மிகள் சிறு முத­லீட்­டா­ளர்­களை ஏமாற்றும் செயலில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இணை­ய­தளம், இமெயில் அல்­லது எஸ்.எம்.எஸ்., மூலம் பங்­குகள் பற்­றிய குறிப்­புகள் மற்றும் ஆலோ­ச­னை­களை வழங்­கு­வதன் மூலம் இதை செய்து வரு­கின்­றனர்.
போலி இணைய முகவரிஇதே போல அண்மையில் டோட்டல் எக்ஸ்போர்ட்ஸ் எனும் அதிகம் அறி­யப்­ப­டாத நிறு­வன பங்­குகள் மீது திடீ­ரென ஆர்­வத்தை ஏற்­ப­டுத்­தினர். பிர­ப­ல­மான நிதி இணை­ய­தளம் ஒன்றின் முக­வரி போலவே. ஆனால், பிழை­யான முக­வ­ரியில் ஒரு இணை­ய­தளம் அமைத்து அந்த நிறு­வன பங்­குகள் இன்­போசிஸ் நிறு­வ­னத்தால் வாங்­கப்­பட இருப்­ப­தாக செய்­தியை பரப்­பினர். இதனால் அந்த நிறு­வன பங்­குகள் மீது ஆர்வம் உண்­டாகி அதன் விலையும் உயர்ந்தது. சிறு முத­லீட்­டா­ளர்கள் பலர் அந்த பங்­கு­களை வாங்­கினர். ஆனால், அந்த செய்தி பொய்­யா­னது என தெரி­ய­வர பங்கின் விலை சரிந்­து­விட்­டது.
வல்லுனர்கள் எச்சரிக்கைமோசடி ஆசா­மிகள் இதை ஒரு உத்­தி­யா­கவே வைத்­தி­ருப்­ப­தாக பங்­குச்­சந்தை வல்­லு­னர்கள் எச்­ச­ரிக்­கின்­றனர். அதிகம் அறி­யப்­ப­டாத நிறு­வன பங்கை தேர்வு செய்து, அந்­நி­று­வனம் தொடர்­பான நல்ல செய்­தியை வதந்­தி­யாக பரப்பி பின்னர் தங்­க­ளுக்குள் அதன் பங்­கு­களை வாங்கி, ஆர்­வத்தை உண்­டாக்­கு­கின்­றனர். இப்­படி திடீ­ரென கவனம் பெரும் பங்­கு­களை சிறு முத­லீட்­டா­ளர்­களும் ஏமாந்து வாங்கி விடு­கின்­றனர். இதற்குள் மோசடி ஆசா­மிகள் தங்கள் வசம் உள்ள பங்­கு­களை விற்று லாபம் பார்த்து விடு­கின்­றனர்.
ஆய்வு அவசியம்அவ்­வப்­போது நடை­பெறும் இந்த ஏமாற்று உத்­திக்கு பலி­யா­காமல் இருக்க, வதந்­தி­களை நம்பி பங்­கு­களை வாங்­கக்­கூ­டாது என்று வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். அதிக அளவில் பரி­வர்த்­தனை செய்­யப்­படும் பங்­கு­களை, சரி­யான ஆலோ­சனை அடிப்­ப­டையில் வாங்க வேண்டும் என்­கின்­றனர். அதை விட முக்­கி­ய­மாக திடீ­ரென தெரிய வரும் ஆலோ­சனை அடிப்­ப­டையில் பங்­கு­களை வாங்­கு­வதை தவிர்க்க வேண்டும் என்­கின்­றனர். அடிப்­ப­டை­யான கார­ணங்கள் இல்­லாமல் ஒரு பங்கு விலை அதி­க­ரிக்­கி­றது என்றால் சந்­தேகம் கொள்ள வேண்டும் என்றும் எச்­ச­ரிக்­கின்­றனர். பங்கு தொடர்­பான முறை­யான ஆய்வை மேற்­கொண்ட பிறகே வாங்­கு­வது பற்றி முடி­வெ­டுக்க வேண்டும் என்­கின்­றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)