பதிவு செய்த நாள்
11 ஏப்2016
07:21
மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம் பற்றி அறிந்திருந்தாலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் மருத்துவ காப்பீட்டை பெறுவதற்கு குறைவான முன்னுரிமையே அளிக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மருத்துவ காப்பீட்டிற்கான பிரீமியம் அதிகமாக இருப்பதாக பரவலாக கருதப்படுவதே இதற்கு காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
தனியார் காப்பீடு நிறுவனமான பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவ காப்பீடு தொடர்பாக நடத்திய ஆய்வில் இவை தெரிய வந்துள்ளன. மருத்துவ செலவுகள் அதிகரித்திருப்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்றாலும் கூட பலரும் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதில்லை என்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால் மட்டுமே மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மருத்துவ சிகிச்சையின் போது மருத்துவமனை செலவு அதிகரித்திருப்பதாக பெரும்பாலானோர் கருதினாலும் கூட மருத்துவ காப்பீடு பெறும் எண்ணம் பலரிடம் இல்லை என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. பிரீமியம் தொகை அதிகமாக இருப்பதாக பரவலாக கருதப்படுவதே இதற்கான காரணமாக பலரும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|