தெளிவற்ற கொள்கையால்... வலைதள சந்தை நிறுவனங்களின் சலுகைகள் தொடரும்தெளிவற்ற கொள்கையால்... வலைதள சந்தை நிறுவனங்களின் சலுகைகள் தொடரும் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.66.50 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.66.50 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பணத்தை பெருக்க எளிய வழி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
07:22

ஆரம்ப கட்­டத்தில் இருந்தே சேமிக்­கத்­து­வங்­கு­வது மற்றும் சேமிப்பை அதி­க­ரிப்­ப­தற்­கான வழி­களை கண்­ட­றி­வதன் மூலம் நீண்ட கால நோக்கில் சேமிப்பின் முழு பலனை பெறலாம் என வலி­யு­றுத்­து­கிறார் நிக் லவுத். பணத்தை பெருக்கும் வழி­களை விவ­ரிக்கும் வகையில் இவர் எழு­திய மல்­டி­பிளை யுவர் மணி புத்­த­கத்தில் பங்­குகள், ஓய்­வூ­தியம், கடன் என பல­வி­ஷ­யங்கள் பற்றி விவ­ரித்­தி­ருந்­தாலும் சேமிப்பின் அரு­மையை குறிப்­பாக வலி­யு­றுத்­தி­யுள்ளார்;
வளத்தை நோக்கி உங்­களை அழைத்­துச்­செல்­லக்­கூ­டிய முத­லீட்டு வாக­னத்தை பெற விரும்­பினால் நீங்கள் முக்­கி­ய­மாக செய்ய வேண்­டி­யது சீக்­கிரம் துவங்­கு­வ­தாகும். மாறாக தாம­த­மாக சேமிக்­கத்­து­வங்­கினால் இலக்கை அடைய அந்த அளவு தாம­த­மாகும்.
நீங்கள் உணர வேண்­டிய மற்­றொரு விஷயம் காலத்தின் அருமை. அதா­வது சேமிப்பு வளர்ந்து பயன் தர அதற்­கான அவ­காசம் தேவை. நீண்ட கால முத­லீடு என்­பது மரம் வைப்­பது போன்­றது. முதல் சில ஆண்­டு­களில் அது சின்ன செடி­யாக தான் இருக்கும். சில ஆண்­டு­களில் அதை நீங்கள் மறக்­கவும் செய்­யலாம். ஆனால் ஒரு நாள் ஜன்னல் வழி­யாக பார்த்தால் செடி வளர்ந்து மர­மாகி இருக்கும். சேமிப்பின் பலனும் இது போன்­றது தான்.
இதற்கு, ஆரம்­பத்தில் இருந்தே சேமிப்­பது மற்றும் முத­லீடு செய்­வது போலவே முத­லீட்டின் வளர்ச்­சியும் மிகவும் முக்­கி­ய­மாகும். நீண்ட கால முத­லீட்­டைப்­பொ­ருத்­த­வரை சிறிய அள­வி­லான வட்டி விகித வேறு­பாடு கூட கூடுதல் பலன் அளிக்க கூடி­யது. எனவே முத­லீட்டில் வளர்ச்சி மிகவும் முக்­கியம். மேலும் முத­லீட்­டா­ளர்கள் தங்கள் முத­லீடு மீதான பரா­ம­ரிப்பு செல­வு­க­ளையும் குறைத்­துக்­கொள்ள வேண்டும். அதிக பலன் தரும் ரிஸ்­கான முத­லீ­டு­களில் கவனம் செலுத்­து­வதை விட, குறைந்த செல­வி­லான முத­லீட்டில் கவனம் செலுத்­து­வது நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும்.
அதே போல சேமித்து வைக்கும் பணத்தை தனியே விட்­டு­விட வேண்டும். இதன் பொருள் இடையே ஏற்­படும் தேவை­க­ளுக்கு அந்த பணத்தில் கை வைக்­காமல் இருக்க வேண்டும். இப்­படி விட்­டு­வைக்கும் போது தான் பணம் நமக்­காக வேலை செய்து பலன் அளிப்­பது சாத்­தியம். ஆனால் அதற்கு முன் ஒருவர், தனது தேவைகள் மற்றும் நிதி நிலையை ஆய்வு செய்து எவ்­வ­ளவு தொகையை முத­லீடு செய்ய முடியும் என தீர்­மா­னித்­துக்­கொள்ள வேண்டும். இந்த தீர்­மா­னத்தில் உறு­தி­யா­கவும் இருக்க வேண்டும். அவ­சர தேவை­க­ளுக்கு என்று ஒரு தொகையை சேமித்து வர வேண்டும். இல்லை என்றால் நெருக்­க­டி­யான காலங்­களில் முத­லீட்டை நஷ்­டத்­திற்கு விற்க வேண்டி வரலாம்.
இந்த விஷ­யங்­க­ளுடன் பண­வீக்­கத்­தையும் மறக்­காமல் இருக்க வேண்டும். சேமிப்பின் உண்­மை­யான எதிர்­கால பலனை கணக்­கிடும் போது பண­வீக்­கத்தை தாக்­கத்­தையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதிக பண­வீக்கம் சேமிப்பின் பலனை அழித்­து­வி­டக்­கூ­டி­யது. குறைந்த அள­வி­லான பண­வீக்கம் கூட நீண்­ட­கால நோக்கில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். எனவே பண­வீக்­கத்­திற்கு ஈடு கொடுக்க கூடிய வகையில் சேமிப்பு முத­லீடும் அமைய வேண்டும்.இதை திட்­ட­மி­டு­வ­தற்கு அடிப்­ப­டை­யான புரிதல் போது­மா­னது. ஆரம்­பத்தில் துவங்கி, சேமிப்பை தொடாமல் இருந்­தாலே போது­மா­னது. சேமிப்பு தன் கட­மையை சரி­யாக செய்து பலன் அளிக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)