பதிவு செய்த நாள்
16 ஏப்2016
07:24
புதுடில்லி : நிஸான் நிறுவனம், தன் டாட்சன் பிராண்டில் புதிய காரான, ‘ரெடிகோ’ காரை அறிமுகம் செய்துள்ளது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான், தன் புதிய காரான ரெடிகோ காரை, டாட்சன் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்திருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டு விட்டாலும் கூட, இன்னும் காரின் விலை எவ்வளவு என்பதை நிஸான் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இந்த கார் மாருதி சுசூகி நிறுவனத்தின், ‘ஆல்டோ’ மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின், ‘இயான்’ கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்பதால், இதன் விலையும் அதன் அளவில் தான் இருக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. இந்த காரை, மே மாதம் முதல் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யலாம் என்றும், ஜூன் மாத ஆரம்பத்தில் தரப்படும் என்றும் நிஸான் மோட்டார் இண்டியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், அருண் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ரெடிகோ கார், இந்தியாவில் டாட்சன் பிராண்டின் கீழ் அறிமுகமாகும் மூன்றாவது கார் ஆகும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|