பதிவு செய்த நாள்
16 ஏப்2016
07:28
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனத்தின் உற்பத்தி குறைவாக இருப்பதால், முன்பதிவு செய்து உள்ளவர்களுக்கு, கார்களை வினியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள, மாருதி சுசூகி நிறுவனம், கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், ‘பலேனோ’ என்ற புதிய ‘ஹேட்ச்பாக்’ காரை அறிமுகம் செய்தது. இந்த காருக்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்த பலேனோ கார்கள் உள்நாட்டில் விற்பனையாவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகின்றன. ஆனால், கார் உற்பத்தி குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உள்நாட்டில், பலேனோ காருக்கு முன் பதிவு செய்துள்ள பலர், அதை வாங்க முடியாமல் காத்திருக்கின்றனர். கடந்த டிச., மாதம், 10 ஆயிரத்து, 572 பலேனோ கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம், 41 சதவீதம் குறைந்து, 6,236 கார்களே விற்பனையாகி உள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|