பதிவு செய்த நாள்
16 ஏப்2016
07:29
புதுடில்லி : இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்க ஏதுவாக, மத்திய அரசு, உயர்மட்டக் குழுவின் பரிந்துரைப்படி, 2013ம் ஆண்டின், நிறுவனங்கள் சட்டத்தில் இருந்த, தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கி, புதிய அம்சங்களை சேர்த்துள்ளது.
இந்த நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதாவை, மார்ச்சில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் தாக்கல் செய்தார்; அதை, நிதித் துறைக்கான பார்லி., நிலைக் குழுவிற்கு, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நேற்று அனுப்பி வைத்தார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., தலைவருமான வீரப்ப மொய்லி தலைமையில் உள்ள, பார்லி., நிலைக்குழு, சட்டத்திருத்த மசோதாவை ஆராய்ந்து, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கும். கடந்த காங்., ஆட்சியில் அறிமுகமான நிறுவனங்கள் சட்டத்தில், தற்போதைய பா.ஜ., அரசு, இரண்டாவது முறையாக திருத்தம் செய்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|