பதிவு செய்த நாள்
19 ஏப்2016
06:52
போபால் : பாபா ராம்தேவ், தன் பதஞ்சலி நிறுவனத்துக்காக மத்திய பிரதேசத்தில், இரண்டு ஆலைகளை அமைக்க முடிவு செய்துள்ளார். யோகா குருவான பாபா ராம்தேவ், பதஞ்சலி என்ற பிராண்டில், பல வகையான உணவு பொருட்களை தயாரித்து, விற்பனை செய்கிறார். இந்த பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருவதால், இரண்டு புதிய ஆலைகளை, ம.பி., மாநிலத்தில் அமைக்க, பாபா ராம்தேவ் முடிவு செய்துள்ளார். இதற்காக, அவரின் சீடரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, அம்மாநிலத்தின் அகர்மால்வா, தார் மாவட்டங்களில், தொழிற்சாலை அமைய உள்ள இடங்களை, ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அவருடன், மாநில அரசு அதிகாரிகளும் சென்றனர். இதுகுறித்து, ஆச்சார்யா கூறுகையில், ‘‘ம.பி.,யில் உணவு பதப்படுத்தும் ஆலை ஒன்றையும், பசு ஆராய்ச்சி மையம் ஒன்றையும் அமைக்க உள்ளோம்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|