பதிவு செய்த நாள்
19 ஏப்2016
06:54
புதுடில்லி : ‘ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், மூன்று ஆண்டுகளில், காலாவதி ஆகி விடும்’ என, தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை, ‘போர்ப்ஸ்’ இதழ் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம், மொபைல் போன், ‘டிவி’ உள்ளிட்ட பல சாதனங்களைத் தயாரித்து, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு, இந்தியா உட்பட, உலகம் முழுவதும் வரவேற்பு காணப்படுகிறது. இருப்பினும், இந்த சாதனங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இந்நிலையில், ‘சுற்றுச்சூழல் கொள்கையால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், மூன்று ஆண்டுகளில், காலாவதியாகி விடும்’ என்றும், ஆப்பிள் ‘டிவி’ மற்றும் ஆப்பிள் ஓ.எஸ்., ஆகியவை, நான்கு ஆண்டுகளில், காலாவதியாகி விடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, ‘போர்ப்ஸ் டாட் காம்’ என்ற இணைய இதழ் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|