பதிவு செய்த நாள்
19 ஏப்2016
06:59
புதுடில்லி : அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனை விவரங்களை, ஒரே வடிவில் தொகுக்க, முடிவு செய்துள்ளன.
கறுப்பு பணம், சட்ட விரோத பணப் பரிமாற்றம், நிதி மோசடி உள்ளிட்ட வழக்குகளை, மத்திய மற்றும் வருவாய் புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கின்றன. இவ்வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டோரின் பணப் பரிவர்த்தனை விவரங்களை, ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு வடிவங்களில் வழங்குகின்றன. இதனால், ஒரு வழக்கில் தொடர்புள்ள பல வங்கிகளின் கணக்கு பரிவர்த்தனை விவரங்களை புரிந்து கொள்ளவே, புலனாய்வு அமைப்பினருக்கு சிரமமாக உள்ளது. மேலும், கால விரையம், மனித உழைப்பு வீணாவதுடன், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதும் தாமதமாகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, ‘அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனை விவரங்களை, ஒரே வடிவில் தொகுத்தளிக்க வேண்டும்’ என, புலனாய்வு அமைப்புகள் கோரி வருகின்றன.
இது தொடர்பாக, மத்திய வருவாய் துறை செயலர், ஹஸ்முக் அதியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ‘தேசிய மின்னணு நிதி பரிமாற்றம், இன்டர்நெட் வங்கி பரிவர்த்தனை வங்கிகள் இடையிலான பணப் பரிமாற்ற விவரங்கள் அனைத்தும், புதிதாக, ஒரே வடிவின் கீழ் கொண்டு வர, இந்திய வங்கிகள் முடிவு செய்துள்ளன’ என, ரிசர்வ் வங்கி பிரதிநிதி தெரிவித்தார். இதன் மூலம், நிதி மோசடி, வங்கி முறைகேடு, கறுப்பு பணம், சட்ட விரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளில், புலனாய்வு அமைப்புகள், விரைந்து செயல்படும் சூழல் உருவாகும் என, தெரிகிறது.
* கடந்த, 2015ல், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், வங்கி மோசடி தொடர்பாக, 11 ஆயிரத்து, 997 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|