பதிவு செய்த நாள்
20 ஏப்2016
08:11
பெங்களூரு : டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டிரைவர்களுக்கு உதவும் நவீன தொழில்நுட்ப வசதிகளை, தன் கார்களில் கொண்டு வர இருக்கிறது. குறிப்பாக, மோதுவதை தவிர்ப்பது, ஆட்டோ பார்க்கிங் போன்ற வசதிகளை தன் கார்கள் மூலமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இது குறித்து இந்நிறுவனத்தின் அட்வான்ஸ்டு புராடெக்ட் இன்ஜினியரிங் பிரிவின் தலைவரான டிம் லெவர்ட்டன் கூறியதாவது:‘‘தானே இயங்கும் கார்கள், டிரைவர் இல்லாமல் செல்லும் கார்கள் என, உலக அளவில் புதிய புதிய முயற்சிகள் நடக்கின்றன. இந்தியாவும் அது போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை புரிந்து கொள்ள வேண்டும். அவை சீராக அறிமுகம் ஆக வேண்டும். அந்த வகையில் விரைவில் கார்களில், சென்சார் டெக்னாலஜி, கேமரா டெக்னாலஜி, ரேடார் டெக்னாலஜி போன்ற தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி, இந்திய சாலைகள் பாதுகாப்பானதாக மாறும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|