பதிவு செய்த நாள்
20 ஏப்2016
08:12
மும்பை : ஆர்ஜியோ என, சுருக்கமாக அழைக்கப்படும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிவேக தொலை தொடர்பு வசதிக்காக, வங்காள விரிகுடா பகுதியில், கடலுக்கு அடியில், 8,100 கி.மீ., துாரம், கண்ணாடி நாரிழை கேபிளை பதித்துள்ளது. இந்த கேபிள் வாயிலான தொலை தொடர்பு சேவை, கடந்த 18ம் தேதி, துவக்கப்பட்டதாக, ஆர்ஜியோ தெரிவித்துள்ளது. ஆர்ஜியோ, வோடபோன் உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் இணைந்து, ‘பே ஆப் பெங்கால் கேட்வே’ என்ற கடலடி கேபிள் பதிப்பு திட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில், ஓர் அங்கமான, ஆர்ஜியோவின் கேபிள் சேவை தற்போது துவங்கிஉள்ளது. இந்நிறுவனம்,சென்னை மையத்தையும், வோடபோன் நிறுவனம், மும்பை மையத்தையும் நிர்வகிக்கும். வினாடிக்கு, 9 ‘டெராபைட்’ வேகத்தில், தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் கடலடி கேபிள் சேவை, இந்தியாவை, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆப்ரிக்க நாடுகளுடன் இணைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|