பதிவு செய்த நாள்
20 ஏப்2016
08:13
மும்பை : இணையதளம் மூலம் பர்னிச்சர்களை விற்க, பிளிப்கார்ட், கோத்ரெஜ் நிறுவனங்கள் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம், இணையதளம் மூலம், பல வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தன் பர்னிச்சர் விற்பனை பகுதியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், கோத்ரெஜ் இன்டீரியோ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. கோத்ரெஜ் இன்டீரியோ பர்னிச்சர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், கோத்ரெஜ் நிறுவனத்தின் பிரத்யேக தயாரிப்புகளை, பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பெற முடியும். தற்போது, ஆன்லைன் பர்னிச்சர் சந்தையின் மதிப்பு, 13 கோடி டாலர் என்றளவில் உள்ளது. இந்த துறை ஆண்டுதோறும், 75 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, 2020ம் ஆண்டில், ஆன்லைன் பர்னிச்சர் துறையின் சந்தை மதிப்பு, 70 கோடி டாலராக உயரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|