பதிவு செய்த நாள்
20 ஏப்2016
08:15
புதுடில்லி : ஜே.கே., டயர் நிறுவனம், இரண்டு, மூன்று சக்கர வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தியில் களம் இறங்க உள்ளது. மோட்டார் வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும், ஜே.கே., நிறுவனத்திற்கு, இந்தியாவில் ஒன்பது; வெளிநாடுகளில் மூன்று தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவில், டயர் சந்தையில், ஜே.கே., மூன்றாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. தற்போது, இந்நிறுவனம், ஹரித்துவாரில் உள்ள பிர்லா டயர்ஸ் நிறுவனத்தின், ஆலையை, 2,200 கோடி ரூபாய் மதிப்பிற்கு கையகப்படுத்தி உள்ளது. இதையடுத்து, ஜே.கே., நிறுவனம், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன டயர்கள் தயாரிப்பில் களம் இறங்க உள்ளது. அந்த ஆலையை கையகப்படுத்துவதன் மூலம், ஜே.கே., நிறுவனத்தின், டயர்கள் தயாரிக்கும் திறன் ஆண்டுக்கு, 40 சதவீதம் உயர்ந்து, 3.47 கோடியாக அதிகரிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|