பதிவு செய்த நாள்
20 ஏப்2016
08:16
புதுடில்லி : ‘‘இணையதள வர்த்தகம் குறித்து நுகர்வோர்களின் புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் இவை சம்பந்தமாக ஒரு குழு அமைத்து, புகார்களை எப்படி கையாள்வது என்பது குறித்து அரசு ஆராய உள்ளது,’’ என்று நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்திருக்கிறார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:தரக்குறைவான பொருட்களை தருவது, குறிப்பிட்ட நேரத்தில் வினியோகிக்காதது, அல்லது காலம் தாழ்த்தி வினியோகிப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இணையதள வர்த்தக நிறுவனங்கள் மீது தொடர்ந்து வருகின்றன. மின்னணு வர்த்தகம் மட்டுமல்ல, அதன் மீதான குற்றச்சாட்டுகளும் அதிகரிக்கின்றன. அதனால் முதலில் ஒரு குழு அமைத்து, இது போன்ற புகார்களை எப்படி கையாள்வது என்று ஆராய இருக்கிறது அரசு. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.குழு அமைக்கப்பட்டு, 15 நாட்களில் அதனிடமிருந்து அறிக்கையை அரசு பெற உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|