பதிவு செய்த நாள்
20 ஏப்2016
08:18
புதுடில்லி : தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனம், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், தனது நிறுவன பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட உள்ளது. தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனம், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட உள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, ஏப்., 27ம் தேதி துவங்குகிறது. மொத்தம், 1.07 கோடி பங்குகள். இவை மும்பை, தேசிய பங்கு சந்தைகளில் வெளியிடப்படுகிறது. இந்நிறுவனத்தில், தற்போது பங்குதாரர்களாக உள்ள வேலுமணி, ஆனந்த் வேலுமணி பங்குகளை வெளியிட உள்ளனர். தைரோகேரின் பங்கு வெளியீட்டை, ஜே.எம். பைனான்சியல், எடெல்வெய்ஸ் பைனான்சியல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன. கடந்த ஆண்டு ஆல்கெம் லேபாரட்டரீஸ், டாக்டர் லால்பாத் லேப்ஸ், போன்ற நிறுவனங்களும், கடந்த மாதம் ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனமும் சந்தையில் பங்குகளை வெளியிட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|