பதிவு செய்த நாள்
20 ஏப்2016
23:28
விசாகப்பட்டினம் : இலங்கையைச் சேர்ந்த, பிராண்டிக்ஸ் லங்கா என்ற ஆடை தயாரிப்பு நிறுவனம், ஆந்திராவில், விசாகப்பட்டினம் அருகே உள்ள, அச்சுதாபுரத்தில், ‘பிராண்டிக்ஸ் அப்பரல் பார்க்’ என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைத்துள்ளது. இங்கு, பல முன்னணி ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன; அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு வாரமாக, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பொருளாதார மண்டலம் என்பதால், இங்கு தொழிற்சங்கங்கள் இல்லை. அதனால், ஆந்திர அரசு, தொழிலாளர்களுடன் நேரடியாக பேசி வருகிறது. இம் மண்டலம், அமெரிக்கா மற்றும், ஐரோப்பிய நாடுகளுக்கான உள்ளாடைகள் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|