பதிவு செய்த நாள்
20 ஏப்2016
23:38
மும்பை : பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கும் தேவையான, ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கு, இந்திய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களை விட, அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.
இது, பி.டபிள்யு.சி., நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த, 100 நிறுவனங்கள் உட்பட, உலகளவில், 1,988 நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும், டிஜிட்டல் முதலீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில், 36 சதவீத இந்திய நிறுவனங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது தெரியவந்துள்ளது; இது, சர்வதேச நிறுவனங்களில், 27 சதவீதமாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப பணிகளில், டிஜிட்டல் முதலீடுகளை, 37 சதவீத இந்திய நிறுவனங்களும், 32 சதவீத சர்வதேச நிறுவனங்களும் மேற்கொள்கின்றன.
அதேசமயம், வாடிக்கையாளர் அனுபவம் தொடர்பான பணிகளில், டிஜிட்டல் தொழில்நுட்ப முதலீடுகளை மேற்கொள்வதில், இந்தியாவை விட, சர்வதேச நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்த ஆய்வில், 12 சதவீத சர்வதேச நிறுவனங்கள், வாடிக்கையாளர் அனுபவம் சார்ந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு, அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக கூறியுள்ளன; இது, இந்திய நிறுவனங்களை பொறுத்தவரை, 7 சதவீதமாக உள்ளது. வர்த்தகத்தில், மிக அதிக அளவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்தும் நிறுவனங்கள், சீரான வருவாய் மற்றும் லாப வளர்ச்சியை காண்கின்றன. இது, டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு குறைந்த முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனங்களை விட, இரு மடங்கு அதிகமாக உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பின்பற்றுவதில், உலகளவில், பெரும்பான்மையான நிறுவனங்கள், வர்த்தக செயல்பாடுகளை விட, தொழில்நுட்பத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.
ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அமெரிக்க நிறுவனங்களிடையே, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் சார்ந்த டிஜிட்டல் பயன்பாடு, முறையே, 66 சதவீதம் மற்றும் 18 சதவீதமாக உள்ளது; இது, இந்திய நிறுவனங்களில், முறையே, 43 சதவீதம் மற்றும், 42 சதவீதமாக உள்ளது; 43 சதவீதத்திற்கும் அதிகமான இந்திய நிறுவனங்களின், டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு, சர்வதேச சராசரியை விட குறைவாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|