பதிவு செய்த நாள்
21 ஏப்2016
10:17
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் வலுவான உயர்வுடன் துவங்கி உள்ளன. 2016 ம் ஆண்டு துவங்கிய பிறகு முதல்முறையாக இன்று சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஏப்ரல் 21, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 219 புள்ளிகள் உயர்ந்து 26,063.20 புள்ளிகளாகவும், நிப்டி 53.15 புள்ளிகள் உயர்ந்து 7967.90 புள்ளிகளாகவும் உள்ளன.
ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், கெயில், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ், ஹச்டிஎப்சி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகள் 5.40 சதவீதம் வரை உயர்ந்ததன் காரணமாக சென்செக்ஸ் மீண்டும் 26,000 புள்ளிகளை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக சரிந்து வந்த எண்ணெய் விலை சீரடைய துவங்கியதை அடுத்து அமெரிக்க பங்குச் சந்தைகளும், ஆசிய பங்குச் சந்தைகளும் உயர்வுடனேயே காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|