பதிவு செய்த நாள்
22 ஏப்2016
04:46
புதுடில்லி : சிறிய கார்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை தவிர்த்து,‘பிரீமியம்’ வகை கார்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்த, ஹுண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில், கார் தயாரிப்பில் இரண்டாவது பெரிய நிறுவனமாக ஹுண்டாய் திகழ்கிறது. இந்நிறுவனம், ஆண்டுதோறும், சிறிது, பிரீமியம், சொகுசு என, பல வகைகளில், புதிய கார்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது, கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும், சிறிய கார் தயாரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இதனால், அந்நிறுவனங்கள் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுஉள்ளது. இந்நிலையில், சிறிய கார்களுக்கு மட்டும் முக்கியத்துவம்வழங்காமல், அனைத்து மாடல்கள் கார்களுக்கும் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது, ஹுண்டாய்.கடந்த நிதியாண்டில், 6.43 லட்சம் கார்களை ஹுண்டாய் விற்பனை செய்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|