பதிவு செய்த நாள்
22 ஏப்2016
04:48
லண்டன் : பிரிட்டன் தலைநகர் லண்டனில், மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:மத்திய அரசு, 2022க்குள், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனை, 175 கிகாவாட் ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக அயல்நாடுகளிலும் முதலீடுகளை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன்படி, பிரிட்டனில்,‘மசாலா பாண்டு’ என்ற கடன் பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன. இவற்றை, அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில், பொது துறையைச் சேர்ந்த, என்.டி.பி.சி., – என்.எல்.சி., பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், பவர் டிரேடிங் கார்ப்பரேஷன், ரூரர் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் வெளியிடும். கடன் பத்திரங்கள் வாயிலாக திரட்டப்படும், 100 கோடி டாலர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|