வர்த்தகம் » பொது
மொபைல் போன் அனுபவம் விற்பனைக்கு அவசியம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஏப்2016
04:51
சென்னை : ‘எந்த நிறுவனத்தின் வலைதளம், மொபைல் போனில் சுலபமாக பொருட்களை வாங்கும் வசதிகளை அளிக்கிறதோ, அந்த நிறுவனத்தையே நுகர்வோர் தொடர்ந்து நாடுகின்றனர்’ என, சைட்கோர் – வன்சன் போர்ன் நிறுவனங்கள் மேற்கொண்ட, சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகளவில், 11 நாடுகளைச் சேர்ந்த, 4,500 நுகர்வோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 76 சதவீதம் பேர், ‘மொபைல் போன் அனுபவம் தான், விசுவாசமாக, ஒரே நிறுவனத்திடம் பொருட்களை வாங்கத் துாண்டுகிறது’ என, தெரிவித்துள்ளனர்.
பொருட்களின் தரம், சுலபமாக தேர்வு செய்யும் வசதி, தகவல் பரிமாற்ற வேகம், எளிமையான விற்பனை முறை ஆகியவற்றுடன், வலுவான, ‘பாஸ்வேர்டு’ மற்றும் பாதுகாப்பான பணப் பரிமாற்றம் குறித்த முக்கியத்துவத்தை கூறும், வலைதளங்களையே, நுகர்வோர் பெரிதும் விரும்புகின்றனர். இத்துடன், சிறப்பான வாடிக்கையாளர் சேவையும், ஒரு நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இத்தகைய வசதி களை அளிக்காத வலைதளங்களில் இருந்து, உடனடியாக வேறு வலைதளங்களுக்கு மாறுவதாக, ஆய்வில் பங்கேற்ற, 93 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதுபோன்ற வலைதளத்தில், மீண்டும் பொருட்களை வாங்குவதில்லை என, 33 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வில், 10ல் ஆறு பேர், மொபைல் போன் மூலம் பொருட்களை வாங்குவதில் முழு திருப்தி என, கூறியுள்ளனர். ஓரளவே திருப்தி என, 24 சதவீதம்; வலைதள தொடர்பு அனுபவம் நன்கு உள்ளதாக, 23 சதவீதம்; போதிய அளவிற்கு, வாடிக்கையாளர் சேவை கிடைப்பதாக, 21 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 22,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 22,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 22,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 22,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!