மொபைல் போன் அனு­பவம் விற்­ப­னைக்கு அவ­சியம்மொபைல் போன் அனு­பவம் விற்­ப­னைக்கு அவ­சியம் ... உள்­நாட்டு உதி­ரி­பா­கங்கள் ஆப்பிள் நிறு­வனம் கோரிக்கை உள்­நாட்டு உதி­ரி­பா­கங்கள் ஆப்பிள் நிறு­வனம் கோரிக்கை ...
இரண்­டா­வது காலாண்­டிலும் இந்­திய பொரு­ளா­தாரம் வளர்ச்சி காணும்; தொழி­ல­தி­பர்கள் நம்­பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2016
04:51

புது­டில்லி : நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, நடப்பு ஏப்ரல் முதல், ஜூன் வரை­யி­லான இரண்­டா­வது காலாண்டில் சிறப்­பாக இருக்கும் என, இந்­திய தொழி­ல­தி­பர்கள் நம்­பு­வ­தாக, கிரான்ட் தார்ன்டன் நிறு­வ­னத்தின், உலக வர்த்­தக ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


ஏற்­க­னவே, முதல் காலாண்­டிலும், நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி குறித்து, இந்­திய தொழி­ல­தி­பர்கள் நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்­தனர். இந்­தியா உட்­பட, 36 நாடு­களில் உள்ள முன்­னணி தொழி­ல­தி­பர்­க­ளிடம் நடத்­திய ஆய்வில், 90 சத­வீத இந்­தி­யர்கள், உள்­நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி சிறப்­பாக இருக்கும் என, தெரி­வித்­துள்­ளனர்.

அறிக்கை விவரம்:
சுல­ப­மாக தொழில்­பு­ரி­வ­தற்கு மத்­திய அரசு மேற்­கொண்டு வரும் நட­வ­டிக்­கைகள், சமீ­பத்­திய கொள்கை அறி­விப்­புகள், ஒழுங்­கு­முறை விதி­மு­றை­களில் செய்த மாற்­றங்கள் ஆகி­ய­வையே, உல­க­ளவில், பொரு­ளா­தார வளர்ச்­சியில், இந்­தியா முத­லிடம் பிடிக்கும் என்ற நம்­பிக்கை, தொடர்ந்து நீடிக்க காரணம்.

‘சிகப்பு நாடா’ முறை
முதல் காலாண்டில், வருவாய் மற்றும் வேலை­வாய்ப்பு அதி­க­ரிக்கும் என, 88 சத­வீத இந்­திய தொழி­ல­தி­பர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். இது, இரண்­டா­வது காலாண்டில், 67 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.சரக்கு மற்றும் சேவை வரி, வரி சீர்­தி­ருத்தம் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டால், இந்­தி­யா­வுக்கு, எதிர்­பார்த்த வெற்றி கிட்டும். கடு­மை­யான கட்­டுப்­பா­டுகள், ‘சிகப்பு நாடா’ முறை, நிதி பற்­றாக்­குறை, போதிய அடிப்­படை கட்­ட­மைப்பு வச­திகள் இல்­லா­தது, திற­மை­யான ஊழி­யர்­க­ளுக்கு பற்­றாக்­குறை போன்­றவை தான், இந்­தி­யாவின், பிர­தான பிரச்­னை­க­ளாக உள்­ளன. நடப்பு காலாண்டில், புதிய கட்­ட­டங்­களில் முத­லீடு அதி­க­ரிக்கும் என, 51 சத­வீத இந்­திய தொழி­ல­தி­பர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

நடப்பு காலாண்டு
ஆராய்ச்சி மற்றும் மேம்­பாட்டு திட்­டங்­க­ளுக்­கான முத­லீ­டுகள், ஏற்­று­மதி ஆகி­யவை குறித்த, இந்­தி­யர்­களின் நம்­பிக்கை, முதல் காலாண்­டை­விட, இரண்­டா­வது காலாண்டில் குறைந்­துள்­ளது. ஆய்வில், உலக பொரு­ளா­தார வளர்ச்சி குறித்த நம்­பிக்கை, 2012ம் ஆண்டின் இறுதி காலாண்­டிற்குப் பின், நடப்பு காலாண்டில் தான் வெகு­வாக குறைந்­துள்­ளது. குறிப்­பாக, ஜி–7 நாடுகள், ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடுகள், வட அமெ­ரிக்கா, ஆசிய பசிபிக் நாடுகள் ஆகி­ய­வற்றின் பொரு­ளா­தார வளர்ச்­சியில், தொழி­ல­தி­பர்­க­ளிடம் நம்­பிக்கை குறைந்­துள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)