வர்த்தகம் » பொது
இரண்டாவது காலாண்டிலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி காணும்; தொழிலதிபர்கள் நம்பிக்கை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஏப்2016
04:51
புதுடில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் சிறப்பாக இருக்கும் என, இந்திய தொழிலதிபர்கள் நம்புவதாக, கிரான்ட் தார்ன்டன் நிறுவனத்தின், உலக வர்த்தக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, முதல் காலாண்டிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து, இந்திய தொழிலதிபர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இந்தியா உட்பட, 36 நாடுகளில் உள்ள முன்னணி தொழிலதிபர்களிடம் நடத்திய ஆய்வில், 90 சதவீத இந்தியர்கள், உள்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என, தெரிவித்துள்ளனர்.
அறிக்கை விவரம்:
சுலபமாக தொழில்புரிவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், சமீபத்திய கொள்கை அறிவிப்புகள், ஒழுங்குமுறை விதிமுறைகளில் செய்த மாற்றங்கள் ஆகியவையே, உலகளவில், பொருளாதார வளர்ச்சியில், இந்தியா முதலிடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை, தொடர்ந்து நீடிக்க காரணம்.
‘சிகப்பு நாடா’ முறை
முதல் காலாண்டில், வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என, 88 சதவீத இந்திய தொழிலதிபர்கள் தெரிவித்திருந்தனர். இது, இரண்டாவது காலாண்டில், 67 சதவீதமாக குறைந்துள்ளது.சரக்கு மற்றும் சேவை வரி, வரி சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால், இந்தியாவுக்கு, எதிர்பார்த்த வெற்றி கிட்டும். கடுமையான கட்டுப்பாடுகள், ‘சிகப்பு நாடா’ முறை, நிதி பற்றாக்குறை, போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, திறமையான ஊழியர்களுக்கு பற்றாக்குறை போன்றவை தான், இந்தியாவின், பிரதான பிரச்னைகளாக உள்ளன. நடப்பு காலாண்டில், புதிய கட்டடங்களில் முதலீடு அதிகரிக்கும் என, 51 சதவீத இந்திய தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு காலாண்டு
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான முதலீடுகள், ஏற்றுமதி ஆகியவை குறித்த, இந்தியர்களின் நம்பிக்கை, முதல் காலாண்டைவிட, இரண்டாவது காலாண்டில் குறைந்துள்ளது. ஆய்வில், உலக பொருளாதார வளர்ச்சி குறித்த நம்பிக்கை, 2012ம் ஆண்டின் இறுதி காலாண்டிற்குப் பின், நடப்பு காலாண்டில் தான் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, ஜி–7 நாடுகள், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், வட அமெரிக்கா, ஆசிய பசிபிக் நாடுகள் ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சியில், தொழிலதிபர்களிடம் நம்பிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 22,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 22,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 22,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 22,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!