பதிவு செய்த நாள்
25 ஏப்2016
00:21
ஒரு மணி நேரத்தில் படித்து விடக்கூடிய சிறிய புத்தகம் தான் என்றாலும், வாழ்நாள் முழுவதும் வழிகாட்டக்கூடியதாக இருக்கிறது, பி.டி.பர்னம் எழுதிய, ‘ஆர்ட் ஆப் மணி கெட்டிங்!’ ஒரு நுாற்றாண்டுக்கு முன் வெளியானாலும் கூட, இந்த புத்தகத்தில் விவரிக்கப்படும் அடிப்படை வழிகள் என்றும் மாறாததாக இருக்கிறது.
செல்வத்திற்கான பாதை எப்போதுமே சம்பாதிப்பதை விட குறைவாக செலவு செய்வ திலேயும் இருக்கிறது என்று கூறும் பர்னம், பணம் சம்பாதிக்க, ஒருவருக்கு தெளிவான சிந்தனை தேவை என்று வலியுறுத்தி அதற்கான வழிகளை நட்பு மிக்க குரு போல விவரிக்கிறார்:
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான நிச்சய வழி. ஒருவர், தனக்கு பொருத்தமான துறையை தேர்வு செய்வது தான். ஒரு சிலர் இயற்கையான இயந்திரங்களை கையாளக்கூடியவர்களாக இருக்கலாம். இன்னும் சிலர் இயந்திரங்களை வெறுக்கலாம். ஒருவர் தன் குணாதிசயத்திற்கு ஏற்ற தொழில் அல்லது வேலையை தேர்வு செய்தால் மட்டுமே அவரால் வெற்றி பெற முடியும். சரியான தொழிலை தேர்வு செய்த பிறகு சரியான இடத்தில் இருக்க வேண்டும். வர்த்தகம் செய்வதாக இருந்தால் ஏற்கனவே எல்லா தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்ட இடத்தை தேர்வு செய்யக்கூடாது. பொருத்தமான இடங்களில் வாய்ப்புகளை தேட வேண்டும். வாழ்க்கையை துவக்குபவர்கள் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். கடன் ஒருவரை கீழே இழுத்துச்செல்லக்கூடியது. அது ஒரு அடிமை நிலை.
வெற்றி பெற தேவையான மற்றொரு முக்கிய குணம் விடாமுயற்சியாகும். பலரிடம் விடாமுயற்சி இருப்பதில்லை. இலக்கை நோக்கி முன்னேறும் போது, நம் மீதே நம்பிக்கை இழந்து முயற்சியை தளர்த்திக்கொள்ளும் போது தோல்வி உண்டாகிறது. தயக்கம் காட்டினால் வேறு ஒருவர் முன்னேறிச் சென்று விடுவார். விடாமுயற்சி என்பது சுய சார்பிற்கான மற்றொரு சொல் என உணர்ந்து செயல்பட வேண்டும். உங்களால் முயன்ற அளவு தீவிரமாக பணியாற்றுங்கள். தேவை எனில் அதிகாலையில் துயிலெழுங்கள். இரவு வரை பணியாற்றுங்கள். உங்களால் முடிந்தவற்றை ஒரு போதும் செய்யாமல் இருக்க வேண்டாம். செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சிறப்பாக செய்யுங்கள்.
உலகில் அதிர்ஷ்டம் என்று எதுவுமில்லை. ஒருவர் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் அவரை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.உங்கள் தொழிலுக்கு ஏற்ற சிறந்த சாதனங்களையும், வழிகளையும் பயன்படுத்துங்கள். பணத்தின் மதிப்பை உணர்ந்திருந்தால் மட்டுமே அதனால் பலன் பெற முடியும். அதற்கேற்ற வகையில் தொழிலில் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். எல்லாம் தெரிந்து விட்டது என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. எப்போதும் பயனுள்ள ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள். எதிலும் சீரான மற்றும் ஒழுங்கான தன்மையை பெற்றிருங்கள். உங்கள் நம்பகத்தன்மையை எப்போதும் தக்க வைத்துக் கொள்ளுங்கள்!
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|