பதிவு செய்த நாள்
25 ஏப்2016
00:24
எப்போதுமே வருமானத்தை விட செலவுகள் அதிகம் இருப்பதாக தோன்றும் போது பட்ஜெட் போடுவது சிக்கலாக இருக்கலாம். இது போன்ற நேரங்களில் ஒரே ஒரு விதியை மட்டும் மனதில் கொண்டு செயல்பட்டால் போதுமானது. ‘முதலீடாக அமையாத எந்த பொருட்கள் மீதும் அளவுக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டாம்’ என்பது தான் அந்த விதி. பணத்தை பார்த்து பார்த்து செலவிடும் போது பெரிய தொகையை செலவு செய்ய நேர்ந்தால் அது, எதிர்காலத்தில் பலனளிக்கும் முதலீடாக இருக்க வேண்டும். இதை அளவுகோளாக வைத்துக் கொண்டால் செலவுகள் தேவையானதா; இல்லையா என்பதையும் எளிதாக தீர்மானிக்கலாம். அப்படியே ஒரு பொருள் தேவையென தோன்றினாலும், அதை உடனே வாங்குவதை தவிர்த்து அதற்கு தேவையான தொகையை சேமித்து வைத்துக் கொண்டு பின்வாங்க வேண்டும்.
நிதி சுதந்திரம் பெற உதவும் வழி
சேமிப்பு பற்றி பேசும் போது அதற்கான வழிகள் விவரிக்கப்படுகின்றனவே தவிர, எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுவதில்லை. சேமிப்பின் தேவையும் அளவும் மாறுபடக் கூடியது என்பதே காரணம். எனினும், நிதி சுதந்திரத்தை பெற விரும்பினால் நீங்கள் எந்தளவு சேமிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். இதற்கு உதவுகிறது, ‘நிதி சுதந்திர எண்’ வழி.
ஏன் தேவைநிதி சுதந்திரம் என்பது, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றல் என்பது முதல், கடனில்லாமல் இருப்பது வரை பலவிதமாக புரிந்து கொள்ளப்படுகிறது. இருப்பினும், வாழ்நாள் முழுவதும் நம் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தொகையை பெற்றிருப்பதே நிதி சுதந்திரம் என புரிந்து கொள்ளலாம். அதாவது, சம்பளத்தை சார்ந்திராமல், விருப்பம் போல முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தை அளிக்கக் கூடிய நிதி நிலை இருக்க வேண்டும்.
எப்படி சாத்தியம்நிதி சுதந்திரம் என்பது லட்சிய நோக்கிலான இலக்கு என்றாலும் சாத்தியமில்லாத ஒன்றல்ல. சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் எளிதில் சாத்தியமாகும். இதற்கு, ‘நிதி சுதந்திர எண்’ சூத்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஒருவர் வாழ்நாள் முழுவதற்கும் போதுமான வருமானத்தை பெற, எந்த அளவு பணம் தேவை என கணக்கிட உதவும் இந்த சூத்திரம் இரண்டு பகுதிகள் கொண்டது.* நிதி சுதந்திர எண் = வருடாந்திர செலவுகள் / பாதுகாப்பாக பணம் எடுக்கும் விகிதம்* இதற்கு தேவைப்படும் ஆண்டு = (நிதி சுதந்திர எண் – கையில் உள்ள சேமிப்பு) / வருடாந்திர சேமிப்பு.
செலவு கணக்கு
உங்களுக்கான, நிதி சுதந்திர எண் சூத்திரத்தை கணக்கிட, முதலில் உங்கள் வருடாந்திர செலவை அறிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக, சேமிப்பில் இருந்து நீங்கள் பிரச்னையில்லாமல் விலக்கி கொள்ளக்கூடிய தொகையின் விகிதத்தை கணக்கிட வேண்டும். இதுவே பாதுகாப்பாக பணம் எடுக்கும் விகிதம். இந்த தொகையால் மூல சேமிப்பில் அதிகம் பாதிப்பு இருக்காது. பொதுவாக இது, 4 சதவீதமாக கொள்ளப்படுகிறது.
எத்தனை ஆண்டுகள்இனி ஆண்டு சேமிப்பை கணக்கிடுங்கள். இப்போது நிதி சுதந்திரத்தை கணக்கிட தேவையான எல்லாம் இருக்கின்றன. நிதி சுந்திர எண் தான் உங்களுக்கு தேவைப்படக் கூடிய வாழ்நாள் தொகை. இதை ஆண்டு சேமிப்பால் வகுத்தால், இந்த தொகையை சேமிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என தெரிய வரும். ஏற்கனவே சேமிப்பு இருந்தால் அதை கழித்துவிட்டு வகுக்க வேண்டும்.இதன் அடிப்படையில், செலவை குறைக்க வேண்டுமா? சேமிப்பை அதிகமாக்க வேண்டுமா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|