பதிவு செய்த நாள்
25 ஏப்2016
00:24
இந்தியாவில், ‘ஸ்டார்ட் அப்’ விலை வீசி வரும் நிலையில், தொழில்முனைவுக்கும் ஆதரவான சூழல் நிலவுகிறது. பெரும்பாலான இந்தியர்கள் தொழில்முனைவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு பலர், தொழில்முனைவில் ஈடுபடவும் விருப்பம் கொண்டுள்ளனர்.ஆம்வே இந்தியா மற்றும் நீல்சன் இந்தியா நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் இவை தெரிய வந்துள்ளன. 21 மாநிலங்களில், 50 நகரங்களில் நடைபெற்ற இந்த ஆய்வில், 10 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்றனர்.இதில், பெரும்பாலான இந்தியர்கள், தொழில்முனைவு குறித்து நல்லவிதமான கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், 47 சதவீதம் பேர் தாங்கள் தொழில்முனைவில் ஈடுபடவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். பலர் ஏற்கனவே இதற்கான முயற்சியில் ஏதோ ஒரு விதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். நான்கில், மூன்று பேர், தொழில்முனைவோர்களை பயிற்சி மூலம் உருவாக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நிதி உதவி அளிப்பதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர். கடந்த, ஐந்து ஆண்டுகளில் நாட்டில் தொழில் துவங்குவதற்கான சூழல் மேம்பட்டிருப்பதாகவும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|