பதிவு செய்த நாள்
25 ஏப்2016
00:26
புதுடில்லி : இந்தியா, 2015ல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் சீனாவை விஞ்சி சாதனை படைத்துள்ளது.நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில், அதிக மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு, 6,300 கோடி டாலர் அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவில் முறையே, 5,960 கோடி டாலர் மற்றும், 5,660 கோடி டாலர் அன்னிய முதலீடுகள் வந்துள்ளன.கடந்தாண்டு, இந்தியாவில் அன்னிய முதலீடுகளை ஈர்த்த திட்டங்களின் எண்ணிக்கை, 8 சதவீதம் உயர்ந்து, 697 ஆக அதிகரித்துஉள்ளது. எனினும் சீனாவின், 789 திட்டங்களை ஒப்பிடும் போது இது குறைவு. சீனா, பல ஆண்டுகளுக்குப் பின், அன்னிய நேரடி முதலீடுகளில் முதன் முறையாக கடந்த ஆண்டு, 23 சதவீத சரிவைக் கண்டுள்ளது. அதுபோல முதலீட்டு திட்டங்களும், 16 சதவீதம் குறைந்துள்ளன. உலகில் அன்னிய முதலீடுகளை அதிகம் ஈர்த்த, 10 இடங்களில், இந்தியாவின், 5 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. குஜராத், 1,240 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்து, முதலிடத்தை பிடித்துள்ளது. சீனாவின் ஷாங்காய் மாகாணம், 1,057 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்து, இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டின் ஜியாங்சூ மாகாணம், 953 கோடி டாலர் அளவிற்கு அன்னிய முதலீடுகளை பெற்றுள்ளது. இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலம், 828 கோடி டாலர் அன்னிய முதலீடுகளை ஈர்த்து, நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|