பதிவு செய்த நாள்
26 ஏப்2016
01:25
புதுடில்லி : கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், ஏப்., – பிப்., வரையிலான, 11 மாதங்களில், இந்தியாவில், இதுவரை இல்லாத வகையில், 5,100 கோடி டாலர், அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது.இதற்கு முன், 2011 – 12ம் நிதியாண்டில், 4,655 கோடி டாலர் அளவிற்கு, அன்னிய நேரடி முதலீடு குவிந்ததே, சாதனையாக இருந்தது. இந்தியாவில், 2014 – 15ம் நிதியாண்டில், அன்னிய நிறுவனங்கள் நேரடியாக, 4,429 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. ‘‘இந்தியாவில் ஆரோக்கியமான வர்த்தகச் சூழல் நிலவுவதால், அன்னிய நிறுவனங்கள், ஆர்வமுடன் முதலீடு மேற்கொள்ளத் துவங்கியுள்ளன,’’ என, தொழில் மற்றும் மேம்பாட்டு துறை செயலர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘‘சுலபமாக தொழில் துவங்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால், இத்தகைய அன்னிய முதலீடு சாத்தியமாகியுள்ளது,’’ என, கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|