பதிவு செய்த நாள்
26 ஏப்2016
01:27
புதுடில்லி : ‘‘சீனாவிலிருந்து, பால் உள்ளிட்ட, பால் பொருட்கள், குறிப்பிட்ட சில வகை மொபைல் போன்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,’’ என, மத்திய வர்த்தக துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்டில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சீனாவின், பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறைவாக இருப்பதுடன், தர நிர்ணய அளவுகளின்படி அமையவில்லை. அதேபோல், அந்நாட்டின் குறிப்பிட்ட, சில மொபைல் போன்களில், ஐ.எம்.எஸ்.இ.ஐ., என்ற சர்வதேச அடையாள குறியீட்டு எண் இல்லை. இதையடுத்து, சீனாவின், பால், பால் பொருட்கள், குறிப்பிட்ட சில மொபைல் போன்கள் இறக்குமதி செய்ய, மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் நிபந்தனையின் படி, ஒரு நாட்டின் இறக்குமதியை முழுவதுமாக தடை செய்ய முடியாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|