200 பெட்ரோல் நிலை­யங்கள்: ரிலையன்ஸ் திட்டம்200 பெட்ரோல் நிலை­யங்கள்: ரிலையன்ஸ் திட்டம் ... ரூபாயின் மதிப்பும் சரிவு - ரூ.66.79 ரூபாயின் மதிப்பும் சரிவு - ரூ.66.79 ...
அமெ­ரிக்­காவை பின்­பற்றி... காப்­பு­ரி­மையை விரைந்து வழங்க மத்­திய அரசு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2016
01:34

புது­டில்லி : இந்­தி­யாவில் தொழில் துவங்­கு­வதை சுல­ப­மாக்கும் நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக, அமெ­ரிக்­காவை பின்­பற்றி, காப்­பு­ரிமை விண்­ணப்­பங்கள் மீதான ஆய்வு காலத்தை குறைக்க, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.
இது குறித்து, தொழில் கொள்கை மற்றும் மேம்­பாட்டு துறை செயலர் ரமேஷ் அபிஷேக் கூறி­ய­தா­வது: பல்­வேறு துறை­களைச் சேர்ந்த நிறு­வ­னங்கள், அவற்றின் படைப்­பு­க­ளுக்கு, ‘பேடன்ட்’ எனப்­படும், காப்­பு­ரிமை கோரி விண்­ணப்­பிக்­கின்­றன. அவற்றை பரி­சீ­லித்து, முதற்­கட்ட ஆய்வை முடிக்க, 5 – 7 ஆண்­டுகள் ஆகின்­றன. இதை, அமெ­ரிக்­காவில் இருப்­பது போல, 18 மாதங்­க­ளாக குறைக்க, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. அதன்­படி, வரும், 2018, மார்ச் முதல், காப்­பு­ரிமை விண்­ணப்­பங்­களின் முதற்­கட்ட ஆய்வு காலம், ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்குள் முடிக்­கப்­படும்.
நிறு­வ­னங்கள் கோரும், ‘டிரேட்மார்க்’ எனப்­படும், வணிக சின்­னத்தை ஆய்வு செய்ய, கூடு­த­லாக, 100 ஆய்­வா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இதனால், முதற்­கட்ட ஆய்வு காலம், 13 மாதங்­களில் இருந்து, எட்டு மாதங்­க­ளாக குறைந்­துள்­ளது. இதை, அடுத்த ஆண்டு, மார்ச்­சுக்குள், ஒரு மாத­மாக குறைக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது, காப்­பு­ரிமை மற்றும் வடி­வ­மைப்­பு­களை ஆய்வு செய்ய, 130 ஆய்­வா­ளர்கள் உள்­ளனர். புதி­தாக, 458 ஆய்­வா­ளர்­களும், ஒப்­பந்த அடிப்­ப­டையில், 263 ஆய்­வா­ளர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.
கம்ப்­யூட்டர் சார்ந்த கண்­டு­பி­டிப்­பு­களில், காப்­பு­ரிமை தொடர்­பான பிரச்­னை­களை ஆராய, உயர்­மட்டக் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. இக்­குழு, இம்­மாத இறு­திக்குள் அறிக்கை வழங்கும் என, தெரி­கி­றது.அது­போல, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களின் காப்­பு­ரிமை தொடர்­பாக ஆராய, 80 வழக்­க­றி­ஞர்­களை கொண்ட குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கு­ழுவும், அதன் பரிந்­து­ரை­களை விரைவில், மத்­திய அர­சுக்கு அளிக்கும். அதைத் தொடர்ந்து, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களின் காப்­பு­ரிமை தொடர்­பான, விதி­மு­றைகள் வெளி­யி­டப்­படும். இவ்­வாறு அவர் கூறினார்.
விண்­ணப்­பங்கள் இந்­தாண்டு, பிப்., 1 நில­வ­ரப்­படி, காப்­பு­ரிமை மற்றும் வணிக சின்னம் உரிமம் கோரி, முறையே, 2,37,029 மற்றும் 5,44,171 விண்­ணப்­பங்கள், மத்­திய அர­சிடம்வந்­துள்­ளன. பணி­யா­ளர்கள் பற்­றாக்­கு­றையால்,காப்­பு­ரிமை மற்றும் வணிக சின்னம் தொடர்­பானவிண்­ணப்­பங்கள் ஆய்வில், தாமதம் ஏற்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)