பதிவு செய்த நாள்
26 ஏப்2016
01:34
புதுடில்லி : இந்தியாவில் தொழில் துவங்குவதை சுலபமாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, அமெரிக்காவை பின்பற்றி, காப்புரிமை விண்ணப்பங்கள் மீதான ஆய்வு காலத்தை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலர் ரமேஷ் அபிஷேக் கூறியதாவது: பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், அவற்றின் படைப்புகளுக்கு, ‘பேடன்ட்’ எனப்படும், காப்புரிமை கோரி விண்ணப்பிக்கின்றன. அவற்றை பரிசீலித்து, முதற்கட்ட ஆய்வை முடிக்க, 5 – 7 ஆண்டுகள் ஆகின்றன. இதை, அமெரிக்காவில் இருப்பது போல, 18 மாதங்களாக குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும், 2018, மார்ச் முதல், காப்புரிமை விண்ணப்பங்களின் முதற்கட்ட ஆய்வு காலம், ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.
நிறுவனங்கள் கோரும், ‘டிரேட்மார்க்’ எனப்படும், வணிக சின்னத்தை ஆய்வு செய்ய, கூடுதலாக, 100 ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், முதற்கட்ட ஆய்வு காலம், 13 மாதங்களில் இருந்து, எட்டு மாதங்களாக குறைந்துள்ளது. இதை, அடுத்த ஆண்டு, மார்ச்சுக்குள், ஒரு மாதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, காப்புரிமை மற்றும் வடிவமைப்புகளை ஆய்வு செய்ய, 130 ஆய்வாளர்கள் உள்ளனர். புதிதாக, 458 ஆய்வாளர்களும், ஒப்பந்த அடிப்படையில், 263 ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் சார்ந்த கண்டுபிடிப்புகளில், காப்புரிமை தொடர்பான பிரச்னைகளை ஆராய, உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, இம்மாத இறுதிக்குள் அறிக்கை வழங்கும் என, தெரிகிறது.அதுபோல, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் காப்புரிமை தொடர்பாக ஆராய, 80 வழக்கறிஞர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவும், அதன் பரிந்துரைகளை விரைவில், மத்திய அரசுக்கு அளிக்கும். அதைத் தொடர்ந்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் காப்புரிமை தொடர்பான, விதிமுறைகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விண்ணப்பங்கள் இந்தாண்டு, பிப்., 1 நிலவரப்படி, காப்புரிமை மற்றும் வணிக சின்னம் உரிமம் கோரி, முறையே, 2,37,029 மற்றும் 5,44,171 விண்ணப்பங்கள், மத்திய அரசிடம்வந்துள்ளன. பணியாளர்கள் பற்றாக்குறையால்,காப்புரிமை மற்றும் வணிக சின்னம் தொடர்பானவிண்ணப்பங்கள் ஆய்வில், தாமதம் ஏற்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|