பதிவு செய்த நாள்
27 ஏப்2016
23:52
போபால் : சன் பார்மா நிறுவனம், மத்திய அரசு மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுடன் இணைந்து, மலேரியா நோயை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இத்திட்டத்திற்காக, முதற்கட்டமாக, மத்திய பிரதேசத்தில், 57 சதவீதத்திற்கும் அதிகமான பழங்குடியினர் வசிக்கும், மன்ட்லா மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு, அடுத்த மூன்று ஆண்டுகளில், மலேரியா நோயை முற்றிலும் ஒழிக்கவும், நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.சன்பார்மா, மலேரியா நோய் தொடர்பான ஆய்வு தகவல்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் பகிர்ந்து கொள்ளும். புதிய மருந்துகள் ஆய்வு மற்றும் மருந்து தயாரிப்பில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், சன் பார்மாவும் இணைந்து செயல்படும். இதற்கான ஒப்பந்தம், விரைவில் கையெழுத்தாகும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|