தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு ...
அடுத்த 35 ஆண்டுகளில் இந்தியாவில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2016
15:54

புதுடில்லி : வேகமாக உயர்ந்து வரும் மக்கள்தொகை காரணமாக இந்தியாவில் அடுத்த 35 ஆண்டுகளில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் நிலவும் என ஐ.நா.வின் ஆசிய-பிசிபிக் பிராந்திய மனிதவள வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கடந்த 1991 முதல் 2013 வரை இந்தியாவில் வேலை செய்வதற்கு ஏற்ற வயதுடைய மக்கள்தொகை 30 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கே வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும் என்ற நிலை இருப்பதால் இதில் 14 கோடி பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர முடியும். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் பேர் வேலை தேடுபவர்களாக உருவாகிறார்கள். பலர், மேற்படிப்புகளை தேர்வு செய்கிறார்கள். தற்போது, இந்தியாவில் 3 கோடி மாணவர்கள் உயர்கல்வியை பயின்று வருகிறார்கள். இப்படியே சென்றால் வரும் 2050-க்குள் 28 கோடி பேர் புதிதாக வேலை தேடுவோர் பட்டியலில் இணைவார்கள்.
இந்தியாவை பொறுத்தவரையில், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். குறைந்த சம்பளம் வாங்கும் மக்கள்தொகையை அதிகம் கொண்டுள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. எனவே தொழிற்துறை மற்றும் உற்பத்தித்துறையில் அதிக கவனம் செலுத்தினால் இங்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இது சீனாவில் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தித்துறை இன்னும் கூட பெரிய அளவில் வளரவில்லை. ஜி.டி.பி.யில் 15 சதவீதத்தை மட்டுமே கொண்டிருக்கும் உற்பத்தித்துறை 11 சதவீத வேலைவாய்ப்புகளையே வழங்கி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)