பதிவு செய்த நாள்
02 மே2016
07:59
கோடை விடுமுறைக்காக இந்த முறை உள்நாட்டிலேயே சுற்றுலா செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கிறீர்களா? நீங்கள் மட்டும் அல்ல, பெரும்பாலான இந்தியர்கள் இப்படி தான் நினைக்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான விடுமுறை கால சுற்றுலா போக்குகள் தொடர்பாக பயண ஏற்பாட்டு இணையதளமான யாத்ரா.காம் நடத்திய ஆய்வில், 69 சதவீத இந்தியர்கள் நாட்டுக்குள்ளேயே சுற்றுலாவை திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துஉள்ளனர். 31 சதவீதம் பேர் வெளிநாடுகளுக்கு பறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். உள்ளூரில் காஷ்மீர், கோவா, கேரளா மற்றும் அந்தமான் தீவுகள் விருப்பத்தேர்வாக இருக்கிறது. வட கிழக்கு மாநிலங்களும் இந்த பட்டியலில் உள்ளது. வெளிநாடுகளைப் பொறுத்தவரை மொரீஷியஸ், பாலி, ஐரோப்பாவை விரும்புகின்றனர்.அதே போல பெரும்பாலானோர் பட்ஜெட் ஓட்டலில் தங்குவதற்கே விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆடம்பர ஓட்டல்களை குறைவான பேரே விரும்புகின்றனர். கணிசமானோர் மொபைல் செயலிகள் மூலம் பயண ஏற்பாடுகளை கவனித்துக்கொள்வதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதையே, 40 சதவீதம் பேருக்கு மேல் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|