பதிவு செய்த நாள்
03 மே2016
06:41
புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சீருடை விரைவில் மாறுகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சீருடையை மாற்றுவது குறித்து, 10 உறுப்பினர்கள் கொண்ட குழு, பல ஆலோசனைகளை தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களே இக்குழுவில் இடம்பெற்றனர்.இது குறித்து ஏர் இந்தியா உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: சீருடைக்காக, 10 பேர் குழு பல்வேறு வகையான ஆடைகளை பரிந்துரைத்திருக்கின்றனர். அதில் காதி ஆடையும் இடம்பெற்றுள்ளது. ஏர் – இந்தியா வரலாற்றில் முதன் முறையாக, விமான ஊழியர்களின் சீருடையை மாற்றுவது குறித்து குழு அமைக்கப்பட்டது. இதன் மூலம், தங்கள் சீருடை குறித்து அவர்களே கருத்து கூறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக தேர்தெடுக்கப்பட்ட சீருடை அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|