பதிவு செய்த நாள்
03 மே2016
06:44
பெங்களூரு : கர்நாடக அரசின் ஒற்றை சாளர அனுமதி குழு, டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியின், 310 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்க திட்டத்துக்கும், ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 455 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கும் அனுமதி அளித்துள்ளது.கர்நாடக மாநில அரசின் ஒற்றை சாளர அனுமதி குழு, கடந்த சனிக்கிழமையன்று கூடி, 42 திட்டங்களுக்கான அனுமதியை வழங்கி உள்ளது. இது குறித்து, மாநில தொழில் மற்றும் சுற்றுலா அமைச்சரான ஆர்.வி.தேஷ்பாண்டே கூறியதாவது: தற்போது, 42 திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் மதிப்பு, 3,028 கோடி ரூபாயாகும். இந்திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்துவதன் மூலம், 1,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அனுமதிக்கப்பட்ட திட்டங்களில், 34 திட்டங்கள் புதிய திட்டங்களாகும். பிற, 8 திட்டங்கள் விரிவாக்கத்துக்கான திட்டங்களாகும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|