பதிவு செய்த நாள்
03 மே2016
06:45
பெங்களூரு : காலம் பின்னோக்கி திரும்புகிறது. கடிகாரங்களுக்கான சந்தை குறைந்துவந்த நிலையில், தற்போது பிரீமியம் வகை கடிகாரங்களுக்கான தேவை அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரீமியம் வகை கடிகாரங்களுக்கான வரவேற்பு கூடி வருகிறது. நாடு முழுவதும், 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான விலை கொண்ட கடிகாரங்கள் அதிகமாக விற்பனை ஆகின்றன. டிஜிட்டல் கடிகாரங்களை விடவும், அனலாக் கடிகாரங்களுக்கு அதிகமான வரவேற்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் டாட் இன் வசம், 5,000 வகையான கடிகாரங்கள் உள்ளன. இவற்றில், 30 வகை பிரீமியம் கடிகாரங்களாகும். இத்தளத்தின் மூலமாக விற்பனை ஆகும் கடிகாரங்களில், 70 சதவீதம் பிரீமியம் வகை கடிகாரங்களே. பெங்களூரில் தான் அதிக பிரீமியம் கடிகாரங்கள் விற்பனை ஆகின்றன. இதையடுத்து டில்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் விற்பனை அதிகம் நடக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|