பதிவு செய்த நாள்
04 மே2016
00:40
புதுடில்லி : நால்கோ நிறுவனம், மத்திய அரசிடம் உள்ள தன், 25 சதவீத பங்குகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த நால்கோ நிறுவனம், அலுமினியம் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், மத்திய அரசு, 25 சதவீத பங்குகளை வைத்து உள்ளது. இந்த பங்குகளை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.
இதுகுறித்து, மத்திய சுரங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு வசம் உள்ள, 25 சதவீத பங்குகளை திரும்ப வாங்கி கொள்வது குறித்து, அடுத்த, 15 நாட்களில் நடக்க உள்ள, நால்கோ நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நால்கோ நிறுவனம், 25 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம், மத்திய அரசு, 3,250 கோடி ரூபாயை திரட்டும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|