பதிவு செய்த நாள்
04 மே2016
00:42
நியூயார்க் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வருண் மல்கோத்ராவின், ஸ்டார்ட் அப் நிறுவனத்தை, கூகுள் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
கனடா நாட்டில் உள்ள, டொரண்டோவை சேர்ந்தவர் வருண் மல்கோத்ரா. இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் முனைவோராக உள்ளார். வருண், 2013ல், சினெர்ஜிஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்நிறுவனம், கூகுள் ஆப்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கூகுள் வாடிக்கையாளர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். தற்போது, இந்நிறுவனத்தை கூகுள் கையகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த இணைப்பினால், வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான வகையில் பயிற்சிகளை வழங்க முடியும் என, நம்புகிறோம்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|