பதிவு செய்த நாள்
04 மே2016
00:43
புதுடில்லி : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் கூறியதாவது: பல்வேறு காரணங்களால், 2011 ஜன., – 2016 மார்ச் வரையிலான காலத்தில், இந்தியா ஏற்றுமதி செய்த, 12,012 வகையான பொருட்களை இறக்குமதி செய்ய, அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு மறுத்து விட்டது. அவற்றில், அங்கீகரிக்கப்படாத பொருட்கள், தரமற்ற மருந்துகள், விதிமுறைகளை பின்பற்றாத ‘பேக்கிங்’, கலப்பட பொருட்கள், நிர்ணயித்ததை விட அதிகமாக, பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதாக கூறப்படும் உணவு வகைகள் உள்ளிட்டவை அடங்கும். தர பரிசோதனைக்குப் பிறகே, பொருட்களை அனுப்ப வேண்டும் என, தயாரிப்பு நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. பேக்கிங்கில், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை, கட்டாயம் குறிப்பிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|