பதிவு செய்த நாள்
04 மே2016
10:27
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக 3வது நாளாக சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 4ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிந்து 25,125.96-ஆகவும், நிப்டி 24 புள்ளிகள் சரிந்து 7,723.40-ஆகவும் இருந்தன.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் சுணக்கத்தாலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்வதாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளர்.
இந்திய பங்குச்சந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குச்சந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 1.16 சதவீதமும், சீனாவின் ஷாங்காய் 0.15 சதவீதமும் சரிந்து காணப்பட்டன. ஜப்பானில் பொதுவிடுமுறை என்பதால் அங்குள்ள பங்குச்சந்தைகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|