பதிவு செய்த நாள்
05 மே2016
04:51
புதுடில்லி : மத்திய அரசு, 2015 16ம் நிதியாண்டு பட்ஜெட்டில், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், ‘நிடி ஆயோக்’ மூலம், சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும், ‘சேது’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவித்தது. ‘ஆனால், ஓராண்டு கடந்த பின்பும், இத்திட்டத்தின் கீழ், நிடி ஆயோக், உருப்படியாக ஒரு காரியத்தையும் செய்யவில்லை’ என, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான, பார்லி., நிலை குழு தெரிவித்துள்ளது. மிக முக்கியமான இந்த திட்டத்திற்கு, ஒரு சில விதிமுறைகளை மட்டுமே நிடி ஆயோக் உருவாக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட, 1,000 கோடி ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது என்பது தெரியவில்லை. ஒரு திட்டம் குறித்த பூர்வாங்க விவரங்களையும், செயல்படுத்தப்படும் முறைகளையும் இறுதி செய்த பின்னரே, அது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என, நிலைக் குழு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|