பதிவு செய்த நாள்
05 மே2016
04:52
புதுடில்லி : ராஜ்யசபா எம்.பி., சந்தன் மித்ரா தலைமையில், வர்த்தக துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு, அரசு திட்டங்களின் செயலாக்கம் குறித்து, அறிக்கை அளித்துள்ளது.
அதன் விவரம்:கடந்த நிதியாண்டில், மத்திய அரசு, ‘மேக் இன் இந்தியா’ எனப்படும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ போன்ற கொள்கை திட்டங்கள் பலவற்றை அறிவித்தது. அத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு, இதர முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து விட்டது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கு, விளம்பரம் மற்றும் பிரசார செலவினங்களுக்கு, 284 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அதிலும், 2015, டிசம்பர் வரை, 40 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதற்கு, செயல் திட்டத்தை சரிவர உருவாக்காதது தான் காரணம். ஒதுக்கப்பட்ட நிதி, குறிப்பிட்ட காலத்தில், பயனுள்ள வகையில் செலவிடப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|