பதிவு செய்த நாள்
05 மே2016
05:00

திருப்பூர் : ‘‘கடந்த, 201516ம் நிதியாண்டில், திருப்பூர் ஆடைகள் ஏற்றுமதி, 16.3 சதவீதம் உயர்ந்து, 23,050 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,’’ என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:கடந்த நிதியாண்டில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 8 சதவீதம் உயர்ந்து, 1.10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளிடம் இருந்து, அதிக அளவில் ‘ஆர்டர்’கள் குவிந்ததால், இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்தாண்டும், வளர்ச்சி தொடரும். ஐரோப்பிய நாடுகளுடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால், திருப்பூர் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, இரு மடங்கு அதிகரித்து, 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர வாய்ப்பு உள்ளது.
சீனா, தயாரிப்பு துறைக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள் துறையில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. அதனால், கடந்த ஓராண்டில், சீனாவின் ஜவுளி ஏற்றுமதியில், ஆயத்த ஆடைகளின் பங்கு, 15 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களுக்கு, வளமான வர்த்தக வாய்ப்பை வழங்கியுள்ளது. திருப்பூர் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நிலையான வர்த்தக வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|